திருக்குறள்

772.

கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது.

திருக்குறள் 772

கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது.

பொருள்:

வலிவு மிகுந்த யானைக்குக் குறிவைத்து, அந்தக் குறிதப்பினாலும்கூட அது, வலிவற்ற முயலுக்குக் குறிவைத்து அதனை வீழ்த்துவதைக் காட்டிலும் சிறப்புடையது.

மு.வரததாசனார் உரை:

காட்டில் ஓடுகின்ற முயலை நோக்கி குறிதவறாமல் எய்த அம்பை ஏந்துதலைவிட, வெட்ட வெளியில் நின்ற யானை மேல் எறிந்து தவறிய வேலை ஏந்துதல் சிறந்தது.

சாலமன் பாப்பையா உரை:

காட்டில் அஞ்சி ஓடும் முயலைக் கொன்ற அம்பைப் பிடித்திருப்பதை விட, எதிர்த்து வரும் யானையின் மீது பட்டும், அதை வீழ்த்தாத வேலைப் பிடித்திருப்பது நல்லது.